வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட சிறுத்தைப்புலிக்குட்டி

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி குட்டியை வனப்பகுதியினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி குட்டியை வனப்பகுதியினர் பத்திரமாக மீட்டனர். 



வால்பாறையை அடுத்துள்ள சவரங்காடு எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் மாலை 4.00 மணியளவில் சிறுத்தைப்புலி குட்டி ஒன்று தேயிலைத் தோட்டத்தில் கண்டதாக வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேலுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். 



இத்தகவலையடுத்து, வானவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று சிறுத்தைப்புலி குட்டியை மீட்டு, ஐயர்பாடி வன உயிரின மேலாண்மை மற்றும் மீட்பு மையத்திற்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். அதில், பிடிபட்டது 3 மாதமே ஆன ஆண் சிறுத்தைப்புலி குட்டி எனவும், தற்போது சிறுத்தைப்புலி ஆரோக்கியமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இன்று இரவு சிறுத்தைப்புலி குட்டியை அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு விடுவதாக வனச்சரக அலுவலர் சக்திவேல் கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...