திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி : திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் சிறப்புக் கூட்டம் நடந்தது. இதில், அதன் தலைவர் கமல் கலந்து கொண்டு பேசியதாவது :- தாய் சொல்லை தட்டாதவன் நான். அதனால், தான் மேடையில் இருக்கிறேன். வீரத்தின் உச்சம் தான் அகிம்சை, தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை. எந்த விஷயத்திலும் மையத்தில் இருந்து பார்த்தால் தான் நீதியும், நியாயமும் தெரியும். எனக்கு பெண்களை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார்கள். எனக்கு சேலை கட்ட தெரியும் என்பதை மீசை முறுக்கி சொல்வேன்.
180 நாளில் கட்சி கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும். தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால், இது போதாது, இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடி பெண்கள் பிறக்காமலேயே இறந்து போய் உள்ளனர். திருச்சியில் இறந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுச்சாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன், இவ்வாறு கூறினார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் சிறப்புக் கூட்டம் நடந்தது. இதில், அதன் தலைவர் கமல் கலந்து கொண்டு பேசியதாவது :- தாய் சொல்லை தட்டாதவன் நான். அதனால், தான் மேடையில் இருக்கிறேன். வீரத்தின் உச்சம் தான் அகிம்சை, தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை. எந்த விஷயத்திலும் மையத்தில் இருந்து பார்த்தால் தான் நீதியும், நியாயமும் தெரியும். எனக்கு பெண்களை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார்கள். எனக்கு சேலை கட்ட தெரியும் என்பதை மீசை முறுக்கி சொல்வேன்.
180 நாளில் கட்சி கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும். தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால், இது போதாது, இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடி பெண்கள் பிறக்காமலேயே இறந்து போய் உள்ளனர். திருச்சியில் இறந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுச்சாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன், இவ்வாறு கூறினார்.