அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து : 3 பேர் பலத்த காயம்

திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மினிவேன் உட்பட நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் : திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மினிவேன் உட்பட நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து மினிவேனில் அருண்மொழி மற்றும் சிவக்குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். திருச்சியிலிருந்து கோவைக்கு காரில் திருச்சியைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் வந்து கொண்டிருந்தார். மாதப்பூர் அருகே திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த  கார் எதிரே வந்து கொண்டிருந்த மினிவேனில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினிவேன் கவிழ்ந்து, பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இந்த விபத்தில், காரில் வந்த எழிலரசன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மினிவேனில் பயணித்த அருண்மொழி மற்றும் சிவக்குமாருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்துக்குள்ளானதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...