கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதவர்களுக்கு தலா 3 ஆண்டுகளும், காரில் கஞ்சா கடத்தியவருக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதவர்களுக்கு தலா 3 ஆண்டுகளும், காரில் கஞ்சா கடத்தியவருக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை உக்கடம் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை ஜோராக நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, ஒருசிலர் வாலிபர்கள் பையில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்து வந்தனர். போலீசார் வருவதையறிந்த அவர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். துரத்திச் சென்று போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜி.எம். நகரைச் சேர்ந்த ஐயூப் (28), ஹரிதாஸ் (28) மற்றும் மதுக்கரையை சேர்ந்த சாகுல் அமீது (30) என்பது அவர்கள் பெயர் எனத் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 21 ஆயிரத்து 380 ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மூவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை போதைப்பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஐயூப் மற்றும் ஹரிதாஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சாகுல் அமீது மீதான குற்றம் நிருபிக்கப்படாததால், அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதேபோல, கோவையை அடுத்த பேரூர் வழியாக காரில் 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றதாக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள் புரத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்தாஸ் (30) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகன்தாஸை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக மோகன்தாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவை உக்கடம் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை ஜோராக நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, ஒருசிலர் வாலிபர்கள் பையில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்து வந்தனர். போலீசார் வருவதையறிந்த அவர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். துரத்திச் சென்று போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜி.எம். நகரைச் சேர்ந்த ஐயூப் (28), ஹரிதாஸ் (28) மற்றும் மதுக்கரையை சேர்ந்த சாகுல் அமீது (30) என்பது அவர்கள் பெயர் எனத் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 21 ஆயிரத்து 380 ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மூவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை போதைப்பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஐயூப் மற்றும் ஹரிதாஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சாகுல் அமீது மீதான குற்றம் நிருபிக்கப்படாததால், அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதேபோல, கோவையை அடுத்த பேரூர் வழியாக காரில் 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றதாக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள் புரத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்தாஸ் (30) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகன்தாஸை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக மோகன்தாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.