திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனைத்து கட்சியினர் சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனைத்து கட்சியினர் சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.

உடுமலையில் அனைத்து கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பெரியார் சிலை அகற்றுவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உடுமலை பகுதியில் நீண்ட காலமாக தந்தை பெரியார் சிலை அமைக்கப்படாமல் உள்ளது. பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு சிலைகள் அமைக்க அனுமதி வழங்கினால், தாங்களே அமைத்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடுமலையில் அனைத்து கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பெரியார் சிலை அகற்றுவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உடுமலை பகுதியில் நீண்ட காலமாக தந்தை பெரியார் சிலை அமைக்கப்படாமல் உள்ளது. பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு சிலைகள் அமைக்க அனுமதி வழங்கினால், தாங்களே அமைத்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.