கோடநாடு காவலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
நீலகிரி : கோடநாடு காவலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை எஸ்டேட் உள்ளது. அங்கு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி வடமலை விசாரித்தார். விசாரணைக்கு உதயகுமார் மற்றும் பிஜின் ஆகிய இருவர் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் திருச்சூரில் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிற வழக்குகளில் ஆஜராகச் சென்றிருப்பதால், உதகை நீதிமன்றத்தில் இன்று இருவரும் ஆஜராகவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர் சிவகுமார் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, வழக்கில் ஆஜராகாத பிஜின் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின்னர், வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், வழக்கு ஆவணங்களை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்து தர வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், சட்டப்பிரிவுகளை முறையாக குறிப்பிட்டு மீண்டும் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை எஸ்டேட் உள்ளது. அங்கு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி வடமலை விசாரித்தார். விசாரணைக்கு உதயகுமார் மற்றும் பிஜின் ஆகிய இருவர் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் திருச்சூரில் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிற வழக்குகளில் ஆஜராகச் சென்றிருப்பதால், உதகை நீதிமன்றத்தில் இன்று இருவரும் ஆஜராகவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர் சிவகுமார் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, வழக்கில் ஆஜராகாத பிஜின் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின்னர், வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், வழக்கு ஆவணங்களை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்து தர வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், சட்டப்பிரிவுகளை முறையாக குறிப்பிட்டு மீண்டும் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.