உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
நீலகிரி : உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பிட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இப்படி பயிரிடப்படும் காய்கறிகளை அடிக்கடி வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விவசாய நிலங்களில் முள் வேலிகள் மற்றும் மின் வேலிகள் மற்றும் மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், உதகை அருகேயுள்ள அத்திக்கள் என்னும் கிராமத்தில் ஒரு குடியிருப்பு அருகே சாரை பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கியுள்ளதாக வன பாதுகாவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வன பாதுகாவலர் சாதிக் மீன் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறு வன விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க இதை போன்ற மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். இதில் சிக்கி சிறு வன விலங்குகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் இதைப் போன்று மீன் வலைகளை வேலிகளில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்." என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பிட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இப்படி பயிரிடப்படும் காய்கறிகளை அடிக்கடி வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விவசாய நிலங்களில் முள் வேலிகள் மற்றும் மின் வேலிகள் மற்றும் மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், உதகை அருகேயுள்ள அத்திக்கள் என்னும் கிராமத்தில் ஒரு குடியிருப்பு அருகே சாரை பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கியுள்ளதாக வன பாதுகாவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வன பாதுகாவலர் சாதிக் மீன் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறு வன விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க இதை போன்ற மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். இதில் சிக்கி சிறு வன விலங்குகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் இதைப் போன்று மீன் வலைகளை வேலிகளில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்." என்றார்.