விமான நிலையத்தில் நடனமாடி மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் விமானிகள்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் விமானப் பணி பெண்கள் பயணிகளுடன் நடனமாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


கோவை : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் விமானப் பணி பெண்கள் பயணிகளுடன் நடனமாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில்,  மகளிர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்திற்கு வரும் பெண் பயணிகளின் வசதிக்காக 'நாப்கின் வெண்டார் மெஷின்' திறந்து வைக்கப்பட்டது. இதனை மாவட்ட பயிற்சி ஆட்சியர் சரண்யா ஹரி அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, 101 வயது ஆன யோகா பாட்டி நாணம்மாள் கவுரவிக்கப்பட்டார்.

பின்னர், பயணிகளைக் குதூகலப்படுத்தும் விதமாக இண்டிகோ விமானப் பெண் ஊழியர்கள், பயணிகளுடன் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

மகளிர் தினத்தின் முக்கிய நிகழ்வாக, 127 பயணிகளுடன் சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்பட்ட ஏர் இந்தியா 539 என்ற விமானத்தைப் பெண் விமானி ரம்யா, துணை விமானி விருந்தா நாயர் ஆகியோர் இயக்கினர். அவர்களது குழுவில், ரஜனி, சைஜா, வர்ஷா, பிரியங்கா, ராஷ்மி சுரபா ஆகிய பணிப்பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த விமானமானது, கோவை விமான நிலையம் வந்தடைந்த போது, கோவை விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், ஏர் இந்தியா கோவை மண்டல மேலாளர் கிரிஜா மற்றும் அதன் ஊழியர்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர், கேக் வெட்டி கொண்டாடி, தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...