பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கு : முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமின்

பேராசிரியர் நியமனத்திற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.


கோவை: பேராசிரியர் நியமனத்திற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முன்னாள் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, இருவருக்கும் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அதாவது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். கோவையை விட்டு வெளியே செல்லக்கூடாது. சாட்சியங்களைக் கலைக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...