உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா சுற்றுலா பயணிகளுடன் மகளிர் தினம் கொண்டாடினார்.
நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா சுற்றுலா பயணிகளுடன் மகளிர் தினம் கொண்டாடினார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடன் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசெண்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இதில் பெண் சுற்றுலா பயணிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடிருந்த பெண் காவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து, ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடன் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசெண்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இதில் பெண் சுற்றுலா பயணிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடிருந்த பெண் காவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து, ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
