அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அ.தி.மு.க., உள்பட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அ.தி.மு.க., உள்பட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் இரு அவைகளிலும் பணிகள் முடங்கி உள்ளன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்களும், பி.என்.பி. மோசடி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. மகளிர் தினத்தை முன்னிட்டு மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்து தனது உரையைப் படித்தார். அதன்பின்னர், அவை நடவடிக்கை தொடங்குவதாக அறிவித்தார். கேள்வி நேரத்தைத் தொடரும்படி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கேட்டுக்கொண்டார். வங்கித்துறை முறைகேடுகள் தொடர்பாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அப்போது, அ.தி.மு.க., தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக, முதலில் மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும், அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம், நான்காவது நாளாகத் தொடர்ந்து கேள்வி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்களின் அமளி தொடர்ந்தது. இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...