எச். ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது: ரஜினிகாந்த்

பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்ற எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்ற எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியடைந்தது. அங்கு வெற்றி பெற்ற பா.ஜ.க., கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தெற்கு திரிபுரா மாவட்டத்தில் பெலோனியா என்ற நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சோவியத் யூனியன் நாட்டைச் சேர்ந்த புரட்சியாளரும், கம்யூனிஸ்டு தலைவருமான லெனின் சிலையை பா.ஜ.க.வினர் அகற்றியதால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.க.,வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பதிவில் இன்று திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் ஈ.வே.ரா.சிலை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனும் நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இன்று போயாஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனமானது என்று அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, தனது அனுமதியின் தன்னுடைய முகநூல் அட்மின் இதனைப் பதிவு செய்துவிட்டதாகவும், இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எச். ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...