தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சர்ச்சைகளை கிளப்பி வன்முறையை தூண்டும் விதமாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்.
பெரியார் சிலை தொடர்பான அவரது கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது சமூக வலைதள பதிவை நீக்கிய எச். ராஜா, தன்னுடைய அனுமதியின்றி தனது அட்மின் அந்த கருத்தை பதிவிட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியனே என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. தமிழ் என்ற மொழியே இருக்கக்கூடாது என்று தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம். இந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும் போது அதற்கான தாக்கம் ஏற்படுவதால் திராவிட கட்சிகள் வசை பாடுகின்றனர்", என்று அவர் கூறினார்.
இந்த சூழலில், தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வன்முறையை தூண்டிவரும் எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகளை கிளப்பி வன்முறையை தூண்டும் விதமாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்.
பெரியார் சிலை தொடர்பான அவரது கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது சமூக வலைதள பதிவை நீக்கிய எச். ராஜா, தன்னுடைய அனுமதியின்றி தனது அட்மின் அந்த கருத்தை பதிவிட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியனே என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. தமிழ் என்ற மொழியே இருக்கக்கூடாது என்று தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம். இந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும் போது அதற்கான தாக்கம் ஏற்படுவதால் திராவிட கட்சிகள் வசை பாடுகின்றனர்", என்று அவர் கூறினார்.
இந்த சூழலில், தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வன்முறையை தூண்டிவரும் எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.