'தமிழ் மொழியை சனியன் என்று பெரியார் கூறியுள்ளார்': அடுத்த சர்ச்சையை கிளப்பும் எச்.ராஜா

தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

சர்ச்சைகளை கிளப்பி வன்முறையை தூண்டும் விதமாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்.

பெரியார் சிலை தொடர்பான அவரது கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது சமூக வலைதள பதிவை நீக்கிய எச். ராஜா, தன்னுடைய அனுமதியின்றி தனது அட்மின் அந்த கருத்தை பதிவிட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியனே என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. தமிழ் என்ற மொழியே இருக்கக்கூடாது என்று தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம். இந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும் போது அதற்கான தாக்கம் ஏற்படுவதால் திராவிட கட்சிகள் வசை பாடுகின்றனர்", என்று அவர் கூறினார். 

இந்த சூழலில், தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வன்முறையை தூண்டிவரும் எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...