நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் கோவைக்கு 3-ம் இடம்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் 3-வது இடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார்.

கோவை : தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் 3-வது இடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார். 

தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று, சிறந்து விளங்கிய ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை சார்பில் வண்டல் மண் அகற்றி நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணியதற்காக கோவை மாவட்டத்திற்கு 3-வது இடத்திற்கான விருது வழங்கப்பட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் வழங்கினார். 



இதேபோல, தமிழக அரசு சார்பில் தமிழகத்தின் சிறந்த ஆட்சியர், மாநகராட்சி, ஆணையர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஆட்சியர்களாக பொன்னையா (காஞ்சிபுரம்), ரோகிணி (சேலம்), சுப்பிரமணியன் (விழுப்புரம்) ஆகியோருக்கும், சென்னை மாநகராட்சி சிறந்த மாநகராட்சிக்கும், சிறந்த போலீஸ் ஆணையராக சென்னை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...