தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் 3-வது இடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார்.
கோவை : தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் 3-வது இடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார்.
தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று, சிறந்து விளங்கிய ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை சார்பில் வண்டல் மண் அகற்றி நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணியதற்காக கோவை மாவட்டத்திற்கு 3-வது இடத்திற்கான விருது வழங்கப்பட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் வழங்கினார்.

இதேபோல, தமிழக அரசு சார்பில் தமிழகத்தின் சிறந்த ஆட்சியர், மாநகராட்சி, ஆணையர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஆட்சியர்களாக பொன்னையா (காஞ்சிபுரம்), ரோகிணி (சேலம்), சுப்பிரமணியன் (விழுப்புரம்) ஆகியோருக்கும், சென்னை மாநகராட்சி சிறந்த மாநகராட்சிக்கும், சிறந்த போலீஸ் ஆணையராக சென்னை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று, சிறந்து விளங்கிய ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை சார்பில் வண்டல் மண் அகற்றி நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணியதற்காக கோவை மாவட்டத்திற்கு 3-வது இடத்திற்கான விருது வழங்கப்பட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் வழங்கினார்.

இதேபோல, தமிழக அரசு சார்பில் தமிழகத்தின் சிறந்த ஆட்சியர், மாநகராட்சி, ஆணையர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஆட்சியர்களாக பொன்னையா (காஞ்சிபுரம்), ரோகிணி (சேலம்), சுப்பிரமணியன் (விழுப்புரம்) ஆகியோருக்கும், சென்னை மாநகராட்சி சிறந்த மாநகராட்சிக்கும், சிறந்த போலீஸ் ஆணையராக சென்னை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.