எச். ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை தொடர்பாக முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : பெரியார் சிலை தொடர்பாக முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிபுராவில் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் அகற்றியது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் திரிபுராவில் இன்று லெனின் சிலை, தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை என பதிவிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எச்.ராஜா மற்றும் பா.ஜ.க.வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எச். ராஜாவை கண்டித்து கோசங்களை எழுப்பி அவரது உருவப் படத்தை காலணியால் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, இன்று மாலை கோவை பெரியார் படிப்பகம் முன்பு, புரட்சிகர இளைஞர் முண்ணனி, புரட்சிகர மாணவர் முண்ணனி சார்பில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டும் வகையில் பேசும் எச். ராஜாவை, தமிழக அரசு சிறையில் அடைக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஆகியவை தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர். பின்னர், எச். ராஜாவின் உருவப் படத்தை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...