பெரியார் சிலை தொடர்பாக முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : பெரியார் சிலை தொடர்பாக முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் அகற்றியது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் திரிபுராவில் இன்று லெனின் சிலை, தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை என பதிவிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எச்.ராஜா மற்றும் பா.ஜ.க.வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எச். ராஜாவை கண்டித்து கோசங்களை எழுப்பி அவரது உருவப் படத்தை காலணியால் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, இன்று மாலை கோவை பெரியார் படிப்பகம் முன்பு, புரட்சிகர இளைஞர் முண்ணனி, புரட்சிகர மாணவர் முண்ணனி சார்பில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டும் வகையில் பேசும் எச். ராஜாவை, தமிழக அரசு சிறையில் அடைக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஆகியவை தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர். பின்னர், எச். ராஜாவின் உருவப் படத்தை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திரிபுராவில் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் அகற்றியது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் திரிபுராவில் இன்று லெனின் சிலை, தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை என பதிவிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எச்.ராஜா மற்றும் பா.ஜ.க.வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எச். ராஜாவை கண்டித்து கோசங்களை எழுப்பி அவரது உருவப் படத்தை காலணியால் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, இன்று மாலை கோவை பெரியார் படிப்பகம் முன்பு, புரட்சிகர இளைஞர் முண்ணனி, புரட்சிகர மாணவர் முண்ணனி சார்பில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டும் வகையில் பேசும் எச். ராஜாவை, தமிழக அரசு சிறையில் அடைக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஆகியவை தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர். பின்னர், எச். ராஜாவின் உருவப் படத்தை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.