டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனான காம்பீர்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். 

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் ஏலமும் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளின் வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுகள் தடைகாலம் முடிந்து மீண்டும் களம்புகுவதால், ஐ.பி.எல். மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்பட்டதை அணியின் தலைமை நிர்வாகி ஹேமந்த் துவா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ‘கவுதம் கம்பீரை கேப்டனாக நியமிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மீண்டும் டெல்லி அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்’ என அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கவுதம் காம்பீர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டனாக கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் விளையாடி உள்ளார். ஆனால் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை தக்க வைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோரை தக்க வைத்தது. இதனால், அதிருப்தியடைந்த காம்பீர், ஏலத்தின்போது தன்னை ஏலம் கேட்க வேண்டாம் என்றும், ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என நிர்வாகத்திடம் கூறியிருந்தார். இதனால், டெல்லி அணி 2.8 கோடி ரூபாய் கொடுத்து காம்பீரை வாங்கியது. காம்பீர் இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...