சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட எச். ராஜாவிற்கு எதிராக தி.க.வினர் போராட்டம்

திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பா.ஜ.க. தேசிய செயலாளரான எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும்,  திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டதற்கும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்தும் திராவிட கழகத்தினர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், எச்.ராஜா புகைப்படத்தை காலணியைக் கொண்டு அடித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடும் எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கோசங்களை எழுப்பினர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...