உலக பணக்காரர்களுக்கான பட்டியலில் அம்பானிக்கு 19-வது இடம்

உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

உலக பணக்காரர்களுக்கான பட்டியலை, போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில், இந்தியாவிலிருந்து 119 பேரும், அமெரிக்காவிலிருந்து 585 பேரும், சீனாவிலிருந்து 373 பேரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில், சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 40.1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 19வது இடத்தில் உள்ளார் கடந்த வருடத்தை விட அவரது சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. சென்ற வருடம் முகேஷ் அம்பானி 33-வது இடத்தில் இருந்தார். 

விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 18.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 58-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத்தின் சேர்மன் லட்சுமி மிட்டல், 18.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 62-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத்தின் சேர்மன் சிவ நாடார் 14.6 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 98-வது இடத்திலும், சன் பார்மாசிடிகல்ஸ் நிறுவனத்தின் திலிப் சங்வி 12.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 115-வது இடத்திலும் உள்ளனர்.

ஆதித்யா பிர்லா நிறுவன தலைவர் குமார் பிர்லா 11.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 127-வது இடத்திலும், கோடக் மகிந்திரா வங்கி நிர்வாக இயக்குநர் உதய் கோடாக் 10.7 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 143-வது இடத்திலும், ராதாகிருஷ்ணன் தாமினி 10 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 151-வது இடத்திலும், அதானி நிறுவனத்தின் நிறுவனர் கவுதம் அதானி 9.7 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 154-வது இடத்திலும், பூன்வாலா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூன்வாலா 9.1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 170-வது இடத்திலும் உள்ளனர். பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா 6.3 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 274வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பேஜோஸ் 100 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...