மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி

உதகையில் உள்ள மகளிர் மேம்பாட்டு வணிக வளாகத்தில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

நீலகிரி: உதகையில் உள்ள மகளிர் மேம்பாட்டு வணிக வளாகத்தில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மகளிர் வியாபாரிகளுக்கு பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியில், பாரம்பரிய உணவுகளான சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு ஆகியவற்றைக் கொண்டு, சாமை எலுமிச்சை சாதம், வரகு பிரியாணி, சாமை தக்காளி சாதம், திணை சாம்பார் சாதம், முளைகட்டிய பயிர்களின் குருமா, நவதானிய குருமா, குதிரைவாலி பொங்கல் ஆகிய உணவுகளை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

"இத்தகைய சிறு தானியங்களைக் கொண்டு உணவு வகைகளைத் தயாரிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளை கவருவதுடன், அவர்களுக்கு நமது பாரம்பரிய உணவு பழக்கத்தை புதுப்பிக்க முடியும்" என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். 



தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன பயிற்சியாளர் ரெக்ஸ் வாஸ் கூறும் போது, "மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சிறு, குறு வியாபாரம் செய்யும் மகளிருக்கு பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வு மற்றும் செய்முறை பயிற்சி கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்றவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ‘பாரம்பரிய உணவு தயாரிப்பு பயிற்சி’ வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மகளிருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் பங்கேற்றவர்கள் மகளிர் தின விழாவில் பாரம்பரிய உணவகத்தை நடத்தவுள்ளனர்.’ என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...