எச். ராஜாவை கைது செய்யக் கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உதகை: பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திரிபுராவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பா.ஜ.க. முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. இதனையடுத்து பா.ஜ.க.வினர் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் கண்டன குரல் எழுப்பி வரும் நிலையில், தி.மு.க., கட்சியினர் எச்.ராஜாவின் பதிவை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகையில் மாவட்ட மற்றும் நகர தி.மு.க., சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கா. ராமசந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், முஸ்தபா உள்ளிட்ட தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் எனக் கூறிய எச். ராஜாவை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...