பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உதகை: பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திரிபுராவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பா.ஜ.க. முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. இதனையடுத்து பா.ஜ.க.வினர் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் கண்டன குரல் எழுப்பி வரும் நிலையில், தி.மு.க., கட்சியினர் எச்.ராஜாவின் பதிவை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகையில் மாவட்ட மற்றும் நகர தி.மு.க., சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கா. ராமசந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், முஸ்தபா உள்ளிட்ட தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் எனக் கூறிய எச். ராஜாவை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.
திரிபுராவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பா.ஜ.க. முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. இதனையடுத்து பா.ஜ.க.வினர் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் கண்டன குரல் எழுப்பி வரும் நிலையில், தி.மு.க., கட்சியினர் எச்.ராஜாவின் பதிவை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகையில் மாவட்ட மற்றும் நகர தி.மு.க., சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கா. ராமசந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், முஸ்தபா உள்ளிட்ட தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் எனக் கூறிய எச். ராஜாவை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.