காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க., எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி நீராகக் குறைத்து திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது.
பெங்களூரு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இதனிடையே, காவிரி மேலாண்மையை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த இரு தினங்களாக தி.மு.க., அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலையின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றும், தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது குரல் எழுப்பினர்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க., எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி நீராகக் குறைத்து திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது.
பெங்களூரு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இதனிடையே, காவிரி மேலாண்மையை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த இரு தினங்களாக தி.மு.க., அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலையின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றும், தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது குரல் எழுப்பினர்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க., எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.