அரசியலுக்கு வர தயங்க மாட்டோம்- பெந்தெகொஸ்த் சபை பொது செயலாளர்

தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம் என்று பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கூறியுள்ளார்.

நீலகிரி: தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம் என்று பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கூறியுள்ளார். 

நீலகிரியில் கிறிஸ்துவ வழிப்பாட்டு தலங்களை மூட சில அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போலீசாரை கண்டித்து உதகையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவ ஜெப வழிபாடு கூடங்களை நடத்த விடாமல் தடுக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 

தொடர்ந்து, மத நல்லிணக்கத்திற்கு விரோதமாகவும், செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிறித்துவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கே.பி.எடிசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியது கண்டனத்துக்குரியது. தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம்." என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...