கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கோவை: கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இன்று அதிகாலை சில நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கவுதம் என்ற தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் சாயிபாபாகாலனி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, சரணடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இன்று அதிகாலை சில நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கவுதம் என்ற தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் சாயிபாபாகாலனி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, சரணடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.