நீலகிரியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அதிரடி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி.வாகனங்கள் இயக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நேற்று அதிரடி ஆய்வினை மேற்கொண்டார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி.வாகனங்கள் இயக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் நேற்று அதிரடி ஆய்வினை மேற்கொண்டார்.

மலை மாவட்டமான நீலகிரியில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்திட போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதிராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நேற்று போக்குவரத்து ஆய்வாளர் சக்திகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிவந்த ஜீப், பயணிகளை ஏற்றிச் செல்லும் கார், உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லும் ஜீப் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் நிறுத்தப்பட்டு அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின் போது போக்குவரத்து ஆய்வாளர் சக்திகுமார் கூறுகையில், "18 வயதுக்கு உட்பட்டோர் கண்டிப்பாக வாகனங்களை இயக்கக் கூடாது. இது சட்டத்தை மீறிய செயலாகும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனத்தை இயக்கும் போது தான் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அனைவரும் கண்டிப்பாக போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும்." என்றார்.

இந்த சோதனையின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கிய பல்வேறு வாகன ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...