'அவர் பேர சொல்ல உனக்கென்ன தகுதி இருக்கு?' - எச்.ராஜாவை விளாசும் நெட்டிசன்ஸ்

தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோவை: தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜ.க. பிரமுகர்கள் சேதப்படுத்தினர்.

இதற்கு பதிலாக அடையாளம் தெரியாத சிலர் இன்று அதிகாலை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். 

தொடர்ந்து, பெரியார் சிலை குறித்து பேஸ்புக் பக்கத்தில் தான் எந்த பதிவும் செய்யவில்லை என்றும். தனது அனுமதியின்றி பேஸ்புக் அட்மின் அவ்வாறு பதிவிட்டதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், "தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது." என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு, தமிழகத்தில் சாதிய அரசியல் செய்து ஆதாயம் பெற முயல்வதாக எச்.ராஜா மீது சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் குற்றம் சட்டி வருகின்றனர்.

புதிய பேஸ்புக் பதிவின் கீழ் அவரை மானாவாரியாக வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள், "முத்துராமலிங்கத் தேவரின் பெயரை உபயோகித்து அரசியல் பேச உனக்கென்ன தகுதி இருக்கின்றது." என்று கோபத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.



அதோடு, காதில் ரத்தம் வரும் அளவிற்கு மானாவாரியாக விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...