ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் காரணமாக கோவை - மயிலாடுதுறை இடையிலான ஜன்சகாப்தி எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை : ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் காரணமாக கோவை - மயிலாடுதுறை இடையிலான ஜன்சகாப்தி எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சிக்குட்பட்ட சோலகாம்பட்டி மற்றும் தஞ்சை இடையிலான ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, (ரயில் எண் : 12083/12084) கோவை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜன்சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை, திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. நாளை (மார்ச் 07) முதல் 27-ம் தேதி வரை 18 நாட்களுக்கு செவ்வாய்கிழமைகளை தவிர மற்ற நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சிக்குட்பட்ட சோலகாம்பட்டி மற்றும் தஞ்சை இடையிலான ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, (ரயில் எண் : 12083/12084) கோவை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜன்சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை, திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. நாளை (மார்ச் 07) முதல் 27-ம் தேதி வரை 18 நாட்களுக்கு செவ்வாய்கிழமைகளை தவிர மற்ற நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.