வரி பாக்கி வைக்கும் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் : மாநகராட்சி எச்சரிக்கை

குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தாமல் இருக்கும் குடியிருப்புகளின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை : குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தாமல் இருக்கும் குடியிருப்புகளின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கோவை மாநகராட்சிக்கு 2017-2018-ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் தினசரி மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. வரிவசூல் பணியினைத் தீவிரப்படுத்தும் பொருட்டு, சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்களின் நிலுவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு செய்யும் பணிகள் முடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, சொத்துவரி நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களின் 27 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...