குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தாமல் இருக்கும் குடியிருப்புகளின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை : குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தாமல் இருக்கும் குடியிருப்புகளின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு 2017-2018-ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் தினசரி மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. வரிவசூல் பணியினைத் தீவிரப்படுத்தும் பொருட்டு, சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்களின் நிலுவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு செய்யும் பணிகள் முடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, சொத்துவரி நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களின் 27 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோவை மாநகராட்சிக்கு 2017-2018-ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் தினசரி மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. வரிவசூல் பணியினைத் தீவிரப்படுத்தும் பொருட்டு, சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்களின் நிலுவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு செய்யும் பணிகள் முடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, சொத்துவரி நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களின் 27 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.