கோடைக்கு முன்பே வறண்டு வரும் நீர்த்தேக்கங்கள் : பொதுமக்கள் கவலை

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 



கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், குன்னூரில் தற்போதே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள 30 வார்டுகளுக்கு நீர் விநியோகிக்கும் முக்கிய நீராதாரமான ரேலியா அணையில் மட்டுமே 39 அடி நீர் இருப்பு உள்ளது. கோடை கால தேவைக்காக இந்த அணையிலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறிய அளவிலான பந்துமி, ஜிம்கானா, கரடிபள்ளம் ஆகிய பிற நீராதாரங்களை தண்ணீர் தேவைக்காக மக்கள் நம்பியிருந்தனர். 

இந்நிலையில், பனிக்காலம் மற்றும் பருவமழை பொய்த்துப் போனதால் பந்துமி நீர்த்தேக்கத்துக்கான நீர்வரத்து நின்று விட்டது. இதனால், நீர்வரத்து இல்லாமல் பந்துமி நீர்த்தேக்கம் முற்றிலுமாக வறண்டு விட்டது. தற்போது, நீரில்லாமல் நீர்த்தேக்கம் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் குன்னூர் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் தேவையை சமாளிக்க மக்கள் நம்பியிருந்த நீராதாரங்கள் ஒவ்வொன்றாக வறண்டு வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...