திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்து அப்பகுதியினர் பந்தல்கள் அமைத்தும், சிறு, சிறு கடைகளும் அமைத்திருந்தனர். இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பந்தல்களை பிரித்து மாநகராட்சி வாகனங்களில் போட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், எந்தவித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள கால அவகாசம் கோரி மாநகராட்சி அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தற்போதைக்கு அகற்றப்படாது என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ராயபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்து அப்பகுதியினர் பந்தல்கள் அமைத்தும், சிறு, சிறு கடைகளும் அமைத்திருந்தனர். இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பந்தல்களை பிரித்து மாநகராட்சி வாகனங்களில் போட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், எந்தவித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள கால அவகாசம் கோரி மாநகராட்சி அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தற்போதைக்கு அகற்றப்படாது என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.