சிரியா அரசைக் கண்டித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் குழந்தைகள் பேரணி

சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா அரசை கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குழந்தைகள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடைபெற்றது.

திருப்பூர் : சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா அரசை கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குழந்தைகள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடைபெற்றது. 



பெரியதோட்டம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் இருந்து ரஷ்யா ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், ஐ.நா. சபை இந்த மனித உரிமை மீறல் விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிரியா விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பதை தவிர்த்துவிட்டு சிரியா மக்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகளின் வழியாக சென்று காங்கயம் சாலையில் உள்ள அல் அமீன் பள்ளியில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, சிரியாவில் இறந்தவர்களுக்காகச் சிறப்பு தொழுகை நடத்தி பிரார்த்தனையும் செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...