சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா அரசை கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குழந்தைகள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடைபெற்றது.
திருப்பூர் : சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா அரசை கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குழந்தைகள் கலந்து கொண்ட கண்டன பேரணி நடைபெற்றது.

பெரியதோட்டம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் இருந்து ரஷ்யா ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், ஐ.நா. சபை இந்த மனித உரிமை மீறல் விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிரியா விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பதை தவிர்த்துவிட்டு சிரியா மக்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகளின் வழியாக சென்று காங்கயம் சாலையில் உள்ள அல் அமீன் பள்ளியில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, சிரியாவில் இறந்தவர்களுக்காகச் சிறப்பு தொழுகை நடத்தி பிரார்த்தனையும் செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


பெரியதோட்டம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் இருந்து ரஷ்யா ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், ஐ.நா. சபை இந்த மனித உரிமை மீறல் விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிரியா விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பதை தவிர்த்துவிட்டு சிரியா மக்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகளின் வழியாக சென்று காங்கயம் சாலையில் உள்ள அல் அமீன் பள்ளியில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, சிரியாவில் இறந்தவர்களுக்காகச் சிறப்பு தொழுகை நடத்தி பிரார்த்தனையும் செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
