சிரியா தாக்குலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசுப் படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

அந்த வகையில், சிரியாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிரியா மற்றும் ரஷிய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். போராட்டத்தின் போது திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிரியா நாட்டு கொடியை எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட போலீசார் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, சிரியா அரசின் தாக்குதலால் பலத்த காயங்களுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையில் கட்டு போட்டும் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...