சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசுப் படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், சிரியாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிரியா மற்றும் ரஷிய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். போராட்டத்தின் போது திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிரியா நாட்டு கொடியை எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட போலீசார் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, சிரியா அரசின் தாக்குதலால் பலத்த காயங்களுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையில் கட்டு போட்டும் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசுப் படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், சிரியாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிரியா மற்றும் ரஷிய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். போராட்டத்தின் போது திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிரியா நாட்டு கொடியை எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட போலீசார் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, சிரியா அரசின் தாக்குதலால் பலத்த காயங்களுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையில் கட்டு போட்டும் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர்.