பெரியார் சிலை விவகாரம் : எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தல்

பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

கோவை : பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர். 



திரிபுராவில் பா.ஜ.க., வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உலகத் தலைவர் லெனின் சிலை அகற்றப்பட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா உருவப் படத்தை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் பேசியதாவது :- லெனினின் சிலை உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை உடைக்கப்படும் எனக் கூறியது கண்டனத்துக்குரியது. எச். ராஜாவை பா.ஜ.க.,வில் இருந்து நீக்க வேண்டும். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ராஜாவை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இந்திய மாணவர் சங்கம் மூலம் அனைத்து மாணவர்களையும் இணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...