பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
கோவை : பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

திரிபுராவில் பா.ஜ.க., வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உலகத் தலைவர் லெனின் சிலை அகற்றப்பட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா உருவப் படத்தை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் பேசியதாவது :- லெனினின் சிலை உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை உடைக்கப்படும் எனக் கூறியது கண்டனத்துக்குரியது. எச். ராஜாவை பா.ஜ.க.,வில் இருந்து நீக்க வேண்டும். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ராஜாவை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இந்திய மாணவர் சங்கம் மூலம் அனைத்து மாணவர்களையும் இணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

திரிபுராவில் பா.ஜ.க., வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உலகத் தலைவர் லெனின் சிலை அகற்றப்பட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா உருவப் படத்தை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் பேசியதாவது :- லெனினின் சிலை உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை உடைக்கப்படும் எனக் கூறியது கண்டனத்துக்குரியது. எச். ராஜாவை பா.ஜ.க.,வில் இருந்து நீக்க வேண்டும். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ராஜாவை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இந்திய மாணவர் சங்கம் மூலம் அனைத்து மாணவர்களையும் இணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.