சிலை உடைப்பு சம்பந்தமாக முகநூல் பக்கத்தில் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சிலை உடைப்பு சம்பந்தமாக முகநூல் பக்கத்தில் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமி சிலை எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளத்தில் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோட்டில் ம.தி.மு.க,.வின் 26-வது மாநிலப் பொதுக்குழுவில் இருந்த வைகோ, இந்தத் தகவலையறிந்து, எச். ராஜாவை கடுமையாக சாடிப் பேசினார். நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, அவரை இடைமறித்து மைக்பிடித்த வைகோ, "பெரியார் சிலையை உடைப்பேன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியில வேணும்னாலும் வச்சிக்கலாம். தைரியம் இருந்தால் சிலை உடைக்க நாள் குறிச்சிட்டு வாங்க. அப்படி வர்றவங்களோட கை, கால் துண்டாக்கப்படும். இந்தக் கை அரிவாள் பிடித்த கை. மோடியின் முப்படையும் வந்தாலும் அதை சந்திக்க நான் தயார்" என ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்.
பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமி சிலை எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளத்தில் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோட்டில் ம.தி.மு.க,.வின் 26-வது மாநிலப் பொதுக்குழுவில் இருந்த வைகோ, இந்தத் தகவலையறிந்து, எச். ராஜாவை கடுமையாக சாடிப் பேசினார். நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, அவரை இடைமறித்து மைக்பிடித்த வைகோ, "பெரியார் சிலையை உடைப்பேன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியில வேணும்னாலும் வச்சிக்கலாம். தைரியம் இருந்தால் சிலை உடைக்க நாள் குறிச்சிட்டு வாங்க. அப்படி வர்றவங்களோட கை, கால் துண்டாக்கப்படும். இந்தக் கை அரிவாள் பிடித்த கை. மோடியின் முப்படையும் வந்தாலும் அதை சந்திக்க நான் தயார்" என ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்.