பணியிழப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஏர்செல் ஊழியர்கள் போராட்டம்

திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஏர்செல் நிறுவனம், உரிய பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஏர்செல் நிறுவனம், உரிய பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் டவர்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கிவந்த வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்தாதால் ஏர்செல்லுக்கு அளித்துவந்த மாற்று வசதியை அந்நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. இதனால், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் வாழும் ஏர்செல் சந்தாதாரர்கள் சமீபத்தில் கடும் அவதிக்குள்ளாகினர். 

இதனிடையே, தங்களை திவால் ஆன நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனு செய்துள்ளது. இந்த மனு நாளை (மார்ச் 07) விசாரணைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஏர்செல் தமிழக தலைமை அலுவலகத்தில் அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, அவர்கள் கூறியதாவது, எந்தவித முன்னறிவிப்பின்றி ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நிறுவனத்தின் நிலைமை குறித்து எந்த விவரமும் ஊழியர்களுக்கு தெரிவிக்காமல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றே கூறி வருகின்றனர். ஆனால், ஏர்செல்லின் இந்த நடவடிக்கையால் சுமார் 30,000 ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். 

எனவே, நீண்ட காலமாக பணியில் இருந்த ஊழியர்கள், ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்த பணியாளர்களுக்கு பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பிஃஎப் போன்ற பிடித்தத் தொகைகளை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...