களிறு திட்டம் குறித்து மேட்டுப்பாளையம் மக்களுக்கு விளக்கம்

யானை மனித முரண்பாடுகளை கையாளுவது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை: யானை மனித முரண்பாடுகளை கையாளுவது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் மலையோர கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டுயானைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எதிர் வரும் கோடை காலத்தில் வனங்களில் ஏற்படும் வறட்சி காரணமாக இப்பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகம் உள்ளதாக 45 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19 கிராமங்கள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமங்கள் ஆகும். 

இதனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தொடரும் யானை மனித மோதல்கள் மற்றும் இதனால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர்ச்சேதங்கள் தவிர்த்தல் குறித்து இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் வனத்துறை, வருவாய்துறை, வேளாண்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. 

இதில் வனவிலங்குகளின் கூடுறுவலை தடுக்கும் விதம் குறித்தும், அவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு பெறுவது குறித்தும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விவசாய விளைநிலங்களில் தேனீகள் வளர்ப்பது, யானை போன்ற விலங்குகளுக்கு பிடித்தம் இல்லாத பயிர்களை நடவு செய்வது போன்றவை இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கான உதவும் என்ற கருத்துக்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

விவசாயத்தை தவிர்த்து வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாப்பது என்பது என்ற திட்டம் சரியானது அல்ல, வேளாண்மையைச் சார்ந்தே இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மனித யானை மோதலைத் தவிர்க்க கொண்டு வரப்பட்ட களிறு திட்டத்தின் நோக்கமாகும் என்று வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...