யானை மனித முரண்பாடுகளை கையாளுவது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.
கோவை: யானை மனித முரண்பாடுகளை கையாளுவது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் மலையோர கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டுயானைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எதிர் வரும் கோடை காலத்தில் வனங்களில் ஏற்படும் வறட்சி காரணமாக இப்பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகம் உள்ளதாக 45 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19 கிராமங்கள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமங்கள் ஆகும்.
இதனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தொடரும் யானை மனித மோதல்கள் மற்றும் இதனால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர்ச்சேதங்கள் தவிர்த்தல் குறித்து இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் வனத்துறை, வருவாய்துறை, வேளாண்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் வனவிலங்குகளின் கூடுறுவலை தடுக்கும் விதம் குறித்தும், அவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு பெறுவது குறித்தும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விவசாய விளைநிலங்களில் தேனீகள் வளர்ப்பது, யானை போன்ற விலங்குகளுக்கு பிடித்தம் இல்லாத பயிர்களை நடவு செய்வது போன்றவை இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கான உதவும் என்ற கருத்துக்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயத்தை தவிர்த்து வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாப்பது என்பது என்ற திட்டம் சரியானது அல்ல, வேளாண்மையைச் சார்ந்தே இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மனித யானை மோதலைத் தவிர்க்க கொண்டு வரப்பட்ட களிறு திட்டத்தின் நோக்கமாகும் என்று வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் மலையோர கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டுயானைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எதிர் வரும் கோடை காலத்தில் வனங்களில் ஏற்படும் வறட்சி காரணமாக இப்பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகம் உள்ளதாக 45 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19 கிராமங்கள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமங்கள் ஆகும்.
இதனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தொடரும் யானை மனித மோதல்கள் மற்றும் இதனால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர்ச்சேதங்கள் தவிர்த்தல் குறித்து இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் வனத்துறை, வருவாய்துறை, வேளாண்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் வனவிலங்குகளின் கூடுறுவலை தடுக்கும் விதம் குறித்தும், அவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு பெறுவது குறித்தும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விவசாய விளைநிலங்களில் தேனீகள் வளர்ப்பது, யானை போன்ற விலங்குகளுக்கு பிடித்தம் இல்லாத பயிர்களை நடவு செய்வது போன்றவை இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கான உதவும் என்ற கருத்துக்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயத்தை தவிர்த்து வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாப்பது என்பது என்ற திட்டம் சரியானது அல்ல, வேளாண்மையைச் சார்ந்தே இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மனித யானை மோதலைத் தவிர்க்க கொண்டு வரப்பட்ட களிறு திட்டத்தின் நோக்கமாகும் என்று வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தினர்.