விளாங்குறிச்சி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: விளாங்குறிச்சி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை விளாங்குறிச்சியில் இருந்து காளப்பட்டி சாலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த தண்ணீர் காளப்பட்டி பகுதி 33, 34, 35 மற்றும் 36 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வெளியேறும் குடிநீர் ஆறு போல ஓடி அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலரான செல்வராஜ் கூறும்போது, "மேற்குறிப்பிட்ட வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் இந்த உடைப்பின் காரணமாக பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மேலும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அதிகாரிகளிடம் முறையிட்டால் மெத்தனமான பதில் தருகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. குடிநீர் வீணாவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்." என்றார்.
கோவை விளாங்குறிச்சியில் இருந்து காளப்பட்டி சாலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த தண்ணீர் காளப்பட்டி பகுதி 33, 34, 35 மற்றும் 36 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வெளியேறும் குடிநீர் ஆறு போல ஓடி அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலரான செல்வராஜ் கூறும்போது, "மேற்குறிப்பிட்ட வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் இந்த உடைப்பின் காரணமாக பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மேலும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அதிகாரிகளிடம் முறையிட்டால் மெத்தனமான பதில் தருகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. குடிநீர் வீணாவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்." என்றார்.