தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சையான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள எச்.ராஜாவுக்கு, துணிவிருந்தால் பெரியார் சிலை மீது கை வையுங்கள் என்று அதிரடி பதிலை தந்திருக்கிறார் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்.
கோவை: தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சையான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள எச்.ராஜாவுக்கு, துணிவிருந்தால் பெரியார் சிலை மீது கை வையுங்கள் என்று அதிரடி பதிலை தந்திருக்கிறார் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்.
கடந்த 3-ம் தேதி நடைபெற்று முடிந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஆட்சி கூட ஏற்காத நிலையில் அம்மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் லெனின் சிலை பா.ஜ.க.வினரால் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
"இன்று லெனின் சிலையை அகற்றப்பட்டது போல நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் பெரியாரின் சிலைகளையும் அகற்றுவோம்" என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எ.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறும் போது, "தமிழகத்தில் ஜாதி வெறியை தூண்டி வன்முறையை ஏற்படுத்தி, ரத்த பூமியாக்க வேண்டும் என்பதற்காகவே வெறிப்பிடித்த சிந்தனையில் ராஜா இது போல் பதிவு செய்து வருகிறார்.
அவருக்குத் துணிவிருந்தால் ஒரு இடத்திலாவது கை வைத்துப் பார்க்கட்டும். தமிழக அரசு தந்தை பெரியாரின் மீது மரியாதை வைத்திருந்தால் எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு உடனடியாக தொடுக்க வேண்டும். அவரை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போகிறோம்." என்றார்.