யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது - வனப்பாதுகாவலர்

வறட்சி காலங்களில் நீருக்காக யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க கோவை வனக்கோட்டத்தில் 105 தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக கோவை கோட்ட வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

கோவை: வறட்சி காலங்களில் நீருக்காக யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க கோவை வனக்கோட்டத்தில் 105 தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக கோவை கோட்ட வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

யானைகள் மனித மோதலைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட களிறு திட்டம் குறித்து ஊடகவியலாளருடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று கோவை சாடிவயல் யானைகள் முகாமில் நடைபெற்றது. இதில் சாடிவயலில் உள்ள கும்கி யானை சுஜயை வைத்து யானைகளை வனத்திற்கு விரட்டும் முயற்சி குறித்தும் விவரிக்கப்பட்டது.

யானைகள் ஊருக்குள் புகுவது குறித்த கணக்கெடுப்பில் கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் கோவையில் உள்ள 7 வனச்சரகங்களில் ஒருந்து 1806 முறை யானைகள் ஊருக்குள் நுழைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை உணவு தேடி விளை நிலையங்களில் புகுந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

எனவே, யானைகள் வந்த பின் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையோடு, வனத்தில் இருந்து வெளியே வராமல் தவிர்க்க களிறு திட்டம் மூலம் ஒதுக்கப்பட்ட ரூ.1.38 கோடி நிதியை பயன்படுத்தி அகழி அமைப்பது, வனத்தில் தண்ணீர் தொட்டி அமைப்பது, மற்றும் யானைகளுக்குத் தேவையான உணவுகளை காட்டிலே விளைய வைப்பதற்கான ஆய்வும் திட்டம் குறித்தும் விவரிக்கப்பட்டது. மேலும் 7 வனச்சரகங்களில் யானைகள் அதிகம் நடமாடக் கூடிய 45 கிராமங்கள் கண்டறியப்பட்டு, போதிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை கோட்ட வனப்பாதுகாவலர் ராமசுப்புரமணியம் கூறுகையில், "கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் வன விலங்குகளுக்காக கோவை கோட்டத்தில் 105 தண்ணீர் தொட்டிகள் பராமரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வாரம் ஒரு முறை நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும், தற்போது சாடிவயல் யானைகள் முகாமிற்கு சேரண் , ஜான் என்ற 2 கும்கி யானைகள் முதுமலை யானைகள் முகாமில் இருந்து கொண்டுவரப்படுகிறது. சுஜய் , பாரி என்ற இரு கும்கி யானைகள் சாடிவயல் முகாமிலிருந்து வேறு முகாமிற்கு மாற்றப்பட உள்ளது." என்று அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...