மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் ஊராட்சி செயலர் பலி

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இரண்டு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பிளிச்சி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் இரண்டு சக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பிளிச்சி ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.



வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (42). பிளிச்சி பகுதியின் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் நேற்று பவானிசாகர் ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமான அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொள்ள தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை சக்தி சாலையில் பெத்திக்குட்டை அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆனந்தகுமார் அவரது கண்களை தானம் செய்துள்ளார். கோவை அரவிந்த் மருத்துவக்குழு அவரது கண்களை எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...