திருப்பூரில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பல்லடம் சாலை வீரபாண்டி பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குடியிருப்பு மிகுந்த பகுதியில் அமைக்கப்பட உள்ள செல்போன் டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது :- குடியிருப்பு மிகுந்த பகுதியில் செல்போன் டவரை அமைக்க கூடாது. செல்போன் டவர் அமைக்கும் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தனிநபர் லாபத்திற்காக பொதுமக்களை பாதிக்கும் இந்த டவர் அமைக்க அனுமதிக்கக் கூடாது. கட்டிடம் மிகவும் மோசமாக இருப்பதால் விபத்து ஏற்படுவதற்கு முன் செல்போன் டவர் அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் சாலை வீரபாண்டி பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குடியிருப்பு மிகுந்த பகுதியில் அமைக்கப்பட உள்ள செல்போன் டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது :- குடியிருப்பு மிகுந்த பகுதியில் செல்போன் டவரை அமைக்க கூடாது. செல்போன் டவர் அமைக்கும் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தனிநபர் லாபத்திற்காக பொதுமக்களை பாதிக்கும் இந்த டவர் அமைக்க அனுமதிக்கக் கூடாது. கட்டிடம் மிகவும் மோசமாக இருப்பதால் விபத்து ஏற்படுவதற்கு முன் செல்போன் டவர் அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.