தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பேணிக்காக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் தலைமையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது தளத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.அதேபோல் 32 மாவட்ட ஆட்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம், முதலமைச்சர் தலைமையில் ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுவது வழக்கம். இறுதியாக 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு நடைபெறவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மார்ச் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.

மாநாட்டைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழகத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தொடர்ந்து செயல்பட வேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து தமிழக அரசை நடத்த உதவிட வேண்டும். தீவிரவாதம், மதவாதம் போன்றவற்றில் இருந்து மக்களைக் காக்க வேண்டும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்றார். 

நாளை (மார்ச் 06) மாவட்ட ஆட்சியாளர்களுக்கான கூட்டமும், 7ம் தேதி காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகள், மக்கள் நல திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...