புதிய கட்டிடங்களுடன் உதகை உழவர் சந்தை: குறைகள் இருப்பதாக குற்றச்சாட்டு

புதிய கட்டிடங்களுடன் தயாராகி வரும் உதகை உழவர் சந்தையில் பல்வேறு குறைகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி: புதிய கட்டிடங்களுடன் தயாராகி வரும் உதகை உழவர் சந்தையில் பல்வேறு குறைகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

உதகை உழவர் சந்தையில் ரூ.26.38 லட்சம் மதிப்பில் 20 கடைகள், மேற்கூரைகள் மற்றும் மின்னணு தராசுகளுக்கு சார்ஜ் செய்யும் இடம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.

உதகை உழவர் சந்தையில் தற்போது 62 கடைகள் உள்ளன. இது தவிர ஏராளமான விவசாயிகள் உழவர் சந்தையின் உட்பகுதியில் உள்ள காலியான இடங்களில் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், தற்போது விவசாயிகளின் நலன் கருதி புதிதாக கூடுதல் கடைகளும் மழை மற்றும் அதிகப்படியான வெயில் கொளுத்தும் நேரங்களில் பொது மக்களும் விவசாயிகளும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மேற்கூரைகளும் அமைக்கும் பணியில் உழவர் சந்தை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி உழவர் சந்தை நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி தொடர்பாக பிரகாஷ் என்ற விவசாயி கூறுகையில், "உழவர் சந்தை நிர்வாகம் சாரியான பணியை மேற்கொண்டாலும் இந்த பணியில் ஒரு சில குறைபாடுகள் உள்ளது. அதனை சாரி செய்ய நிர்வாக தரப்பில் கவனம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மேற்கூரை அமைத்த பகுதிகளில் போதிய இடைவெளியோடு வெளிச்சம் தரக்கூடிய மேற்கூரைகள் அமைக்காத காரணத்தால் இருள் சூழ்ந்த தன்மை உள்ளது. மேலும், புதிதாகக் கட்டப்பட்ட கடைகள் ஒற்றைச் செங்கல் முறையில் கட்டப்பட்டுள்ளதால் போதிய பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லை." என்றார். 

இது குறித்து உழவர் சந்தை நிர்வாகத்திடம் கேட்டபோது, "பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை பணிகள் நிறைவு பெறுவதற்குள் சாரி செய்துவிடுவோம்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...