பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி: 272 பேர் பங்கேற்பு

பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 272 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை: பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 272 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பொள்ளாச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் போட்டியில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இருந்தும் கேரள மற்றும் கர்நாடகாவில் இருந்தும் 272 பேர் பங்கேற்றனர்.



எடை வாரியாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றவர்கள் தங்களது திறமைகளை மேடையில் அரங்கேற்றினர். 55 கிலோ எடை வரை ஒரு பிரிவாகவும், 55 முதல் 65 கிலோ எடை, 65 முதல் 75 கிலோ எடை, 75 முதல் 85 கிலோ எடை, 85 க்கும் மேல் என்று பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. 

இந்த பிரிவுகளில் முதல் இடம் பிடித்த ஆணகழனுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.

அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஓப்பன் கேட்டகிரி போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் பரிசு பெற்றவருக்கு இருசக்கர வாகனமும், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு குளிர்சாதன பெட்டியும் வழங்கப்பட்டது. 

இந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பூனேவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சியில் முதன் முறையாக ஆணழகன் போட்டி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...