கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, பணம் கொள்ளை

கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.



கோவை: கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. 

சூலூரில் வசித்து வருபவர் ரங்கசாமி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். கடந்த வியாழன் அன்று ரங்கசாமி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொடுமுடிக்கு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை வீடு திரும்பிய ரங்கசாமி முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ-வில் இருந்த 25 சவரன் நகை, தொலைக்காட்சி பெட்டி மற்றும் மைக்ரோ வேவ் ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.



இதையடுத்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு சம்பவம்

திருப்பூர் தாராபுரம் சாலை அமராவதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருண. டையிங் தொழில் செய்து. நேற்று காலை உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் சிவன்மலை சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 18 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய அருண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது இக்கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...