கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மகளிடம் நகை பறிப்பு

கோவையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

கோவை: கோவையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

உக்கடம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி புரிபவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் லாவண்யா.

இன்று காலை தனது மகளை சென்னை அனுப்பி வைப்பதற்காக ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது பி.ஆர்.எஸ் மைதானம் முன்பு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் லாவண்யாவின் கழுத்தில் இருந்த 1 பவுன் நகையை பறித்துச் சென்றார்.

காவலர் குடியிருப்பின் அருகில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் சீருடையில் இருந்தபோதே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தொடர்ந்து இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...