கோவையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
கோவை: கோவையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
உக்கடம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி புரிபவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் லாவண்யா.
இன்று காலை தனது மகளை சென்னை அனுப்பி வைப்பதற்காக ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது பி.ஆர்.எஸ் மைதானம் முன்பு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் லாவண்யாவின் கழுத்தில் இருந்த 1 பவுன் நகையை பறித்துச் சென்றார்.
காவலர் குடியிருப்பின் அருகில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் சீருடையில் இருந்தபோதே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்கடம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி புரிபவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் லாவண்யா.
இன்று காலை தனது மகளை சென்னை அனுப்பி வைப்பதற்காக ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது பி.ஆர்.எஸ் மைதானம் முன்பு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் லாவண்யாவின் கழுத்தில் இருந்த 1 பவுன் நகையை பறித்துச் சென்றார்.
காவலர் குடியிருப்பின் அருகில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் சீருடையில் இருந்தபோதே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.