சென்னை அப்பல்லோவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த கமலஹாசன்

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று சந்தித்துப் பேசினார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று சந்தித்துப் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் முதலமைச்சராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். தற்போது 72 வயதான அவர், நேற்று கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு சென்றார். கடந்த 22-ம் தேதி கொல்லப்பட்ட மது என்ற பழங்குடி இளைஞரின் வீட்டுக்கு அரசு அதிகாரிகளுடன் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், அங்கு பல்வேறு ஆய்வுகளும் நடத்தினார். இந்த நிலையில், இன்று அதிகாலை 2.20 மணி அளவில் பினராயி விஜயனுக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாகவும், அதன் காரணமாக சென்னை கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோதனைகள் முடிந்து அவர் நாளை (மார்ச் 04) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரைச் சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன் முடிவு செய்தார். இதற்காக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அனுமதி பெறப்பட்டது. அதன்பின், நடிகர் கமலஹாசன் மருத்துவனைக்கு சென்று முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். நடிகர் கமலஹாசனை முதலமைச்சர் பினராயி விஜயனும், அவரின் மனைவியும் வரவேற்றனர். அதன்பின்னர், பினராயி விஜயனுடன் சிறிது நேரம் பேசிய, கமலஹாசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக அறிவித்தபோது, அதாவது ஓணம் பண்டிகையின் போது, கேரளா சென்று முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து பேசினார். அப்போது, நிருபர்களிடம் பேசிய நடிகர் கமலஹாசன், அரசியல் பாடம் கற்க வந்திருக்கிறேன் என்று கூறி தனது அரசியல் நிறம் ஒருபோதும் காவியாக இருக்காது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...