நாளுமன்ற தேர்தலில் இ.பி.எஸ் மற்றும் தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் ராம்தாஸ் அத்வாலி

வருகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் அணியரும் ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்விலாஸ் அத்வாலி கூறியுள்ளார்.


கோவை: வருகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் அணியரும் ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலி கூறியுள்ளார்.

கோவை விருந்தினர் மாளிகையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:-

திரிபுராவில் 30 ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வந்த இடதுசாரிகளை பா.ஜ.க வீழ்த்தி இருக்கிறது.

மேகாலயாவிலும் அதிக இடங்களை பிடித்து இருக்கிறது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கும்.

தினகரன் தற்போதுள்ள அதிமுகவில் இணைந்து அமைச்சராக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. தினகரன் அணி, ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர் வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற முடியும். 

இதுவரை மறைமுகமாக ஆதரவளித்து வந்த அ.தி.மு.க.,வினர் நேரடியாக ஆதரவளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறோம். 

மகாராஷ்டிராவில் பா.ஜ.க , சிவசேனா இடையில் உள்ள பிரச்சினைகளை போக்க முயற்சி செய்கிறோம். இருவரும் அங்கு தனித்தனியாக போட்டியிட்டால் மக்களுக்கு பலன் இல்லாமல் போய்விடும்.

இந்தியா போன்ற நாடுகளில் சாதி மறுப்பு திருமணங்களை தடுக்கக்கூடாது. பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் போட்டியிட இந்தியா என்ற கோட்பாடுக்குள் தான் நாம் எதிர்க்க வேண்டியுள்ளதால் சாதி,மதங்களை கடந்து வாழ வேண்டும்.

வடமாநிலங்களில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஜாட், படேல் போன்று இட ஒதுக்கீடு கேட்கும் சமூகங்களை அதில் சேர்க்க வேண்டும். தலித் மக்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம். சாதி முறையே தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு காரணம். தலித் மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு வகையில் தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...