தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் அகல்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 10-ம் வகுப்பு வரை பயின்று வீட்டில் இருந்து வருகிறார்.
அகல்யாவை அதே பகுதியை சேர்ந்த வங்கி காவலாளி மோசஸ் (70) மற்றும் மனோஜ்குமார் (29) இருவரும் தனிதனியே அகல்யாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர் ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறப்படுகிறது. தனது மகள் பாலியல்பலாத்காரம் செய்யபட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அகல்யா-வின் தந்தை தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இச்சம்பவம் குறித்து தாராபுரம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக70 வயது முதியவர் மோசஸ் மற்றும் வாலிபர் மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தார்.
இச்சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் அகல்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 10-ம் வகுப்பு வரை பயின்று வீட்டில் இருந்து வருகிறார்.
அகல்யாவை அதே பகுதியை சேர்ந்த வங்கி காவலாளி மோசஸ் (70) மற்றும் மனோஜ்குமார் (29) இருவரும் தனிதனியே அகல்யாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர் ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறப்படுகிறது. தனது மகள் பாலியல்பலாத்காரம் செய்யபட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அகல்யா-வின் தந்தை தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இச்சம்பவம் குறித்து தாராபுரம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக70 வயது முதியவர் மோசஸ் மற்றும் வாலிபர் மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தார்.
இச்சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.