2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணையவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோவை : 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணையவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது :- இந்தியா போன்ற நாடுகளில் சாதி மறுப்பு திருமணங்களை தடுக்கக்கூடாது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் போட்டியிட இந்தியா என்ற கோட்பாட்டுக்குள் நாம் எதிர்க்க வேண்டியுள்ளதால் சாதி, மதங்களைக் கடந்து வாழ வேண்டும். வட இந்தியாவில் ஜாட், படேல் ஆகிய சமூகத்தினரும் இட ஒதுக்கீடு கேட்கின்றனர். ஏற்கனவே, சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்தி அவர்களையும் இணைக்க வேண்டும். தலித் மீதான தாக்குதல்களை தடுக்க சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு வகையில் தீர்வாக அமையும்.
கேரளாவில் மது உயிரிழந்தது கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற கொடுமையான தாக்குதல்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், அ.தி.மு.க., தினகரனை இணைத்து, 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். இவ்வாறு கூறினார்.
கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது :- இந்தியா போன்ற நாடுகளில் சாதி மறுப்பு திருமணங்களை தடுக்கக்கூடாது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் போட்டியிட இந்தியா என்ற கோட்பாட்டுக்குள் நாம் எதிர்க்க வேண்டியுள்ளதால் சாதி, மதங்களைக் கடந்து வாழ வேண்டும். வட இந்தியாவில் ஜாட், படேல் ஆகிய சமூகத்தினரும் இட ஒதுக்கீடு கேட்கின்றனர். ஏற்கனவே, சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்தி அவர்களையும் இணைக்க வேண்டும். தலித் மீதான தாக்குதல்களை தடுக்க சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு வகையில் தீர்வாக அமையும்.
கேரளாவில் மது உயிரிழந்தது கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற கொடுமையான தாக்குதல்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், அ.தி.மு.க., தினகரனை இணைத்து, 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். இவ்வாறு கூறினார்.