கர்நாடகா மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் வன அதிகாரி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் வன அதிகாரி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மைசூர் மாவட்டத்தில் தொட்டாபைரன் குப்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள ககனகோட் என்ற இடத்தில் உள்ள கபினி ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகர்ஹால் புலிகள் காப்பகத்தின் இயக்குநரும், வனப்பாதுகாப்பு அதிகாரியுமான எஸ். மணிகண்டனின் தலைமையில் வனஅதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, ஜி.பி.எஸ். கருவியைப் பயன்படுத்தி வனப்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை வனஅதிகாரிகளை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அதிகாரி மணிகண்டன் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் சக வன அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் மாவட்டத்தில் தொட்டாபைரன் குப்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள ககனகோட் என்ற இடத்தில் உள்ள கபினி ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகர்ஹால் புலிகள் காப்பகத்தின் இயக்குநரும், வனப்பாதுகாப்பு அதிகாரியுமான எஸ். மணிகண்டனின் தலைமையில் வனஅதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, ஜி.பி.எஸ். கருவியைப் பயன்படுத்தி வனப்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை வனஅதிகாரிகளை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அதிகாரி மணிகண்டன் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் சக வன அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.